Monday, November 26, 2007

குழந்தைகள்..

தத்தித் தவழ்ந்து வரும்,
தங்க நிறச் சிற்பமோ?
தாலாட்டு வேண்டுமென்று,
தாரைக் கண்ணீர் வடிக்குமோ?

அமுதம் வேண்டுமென்று,
ஆரவாரம் செய்குமோ?
அம்மா என்றழைத்து,
அன்புள்ளம் காட்டுமோ?

சிக்கனச் சிரிப்பினில்,
சின்னதாய் மயக்குமோ?
சிங்காரச் சேட்டையில்,
சில நேரம் ஆட்டமோ?

வள்ளுவன் குறள்படி,
வாய்மலர்ந்த குரலடி,
வாஞ்சையுடன் வார்த்தெடுத்த,
வானவில் ஓவியமடி..

கரும்புக் கன்னங்கள்,
கடித்திட மழலைகள்,
கள்ளம் கபடமற்ற - இந்த
காவியக் குழந்தைகள்..

நீ மட்டும்..

பாரினிலே பாவையர்கள்
பல்லாயிரம் பார்த்துவிட்டேன்
பால் நிலா நீ மட்டும்
பசுமரத்தாணியாய் என் நெஞ்சில்..

என்ன செய்ய வேண்டும்!!

நாணத்தோடு நட்பாகி,
நட்பென்றால் உறவாகி,
உறவென்றால் உயிராகி,
உயிரென்றால் நீயாகி,
நீயென்றால் நானாக,
என்ன செய்ய வேண்டும்
எனதன்பே?

இக்கண்,
உந்தன் உறவாக நினைக்கும்
இரகசியக் காதலன்.