தத்தித் தவழ்ந்து வரும்,
தங்க நிறச் சிற்பமோ?
தாலாட்டு வேண்டுமென்று,
தாரைக் கண்ணீர் வடிக்குமோ?
அமுதம் வேண்டுமென்று,
ஆரவாரம் செய்குமோ?
அம்மா என்றழைத்து,
அன்புள்ளம் காட்டுமோ?
சிக்கனச் சிரிப்பினில்,
சின்னதாய் மயக்குமோ?
சிங்காரச் சேட்டையில்,
சில நேரம் ஆட்டமோ?
வள்ளுவன் குறள்படி,
வாய்மலர்ந்த குரலடி,
வாஞ்சையுடன் வார்த்தெடுத்த,
வானவில் ஓவியமடி..
கரும்புக் கன்னங்கள்,
கடித்திட மழலைகள்,
கள்ளம் கபடமற்ற - இந்த
காவியக் குழந்தைகள்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment