Monday, December 3, 2007

இவர்கள் காலத்தில்..

தமிழாண்ட மீசையும்
தமிழை ஆண்ட முண்டாசும்
தனக்கே உரித்தான - பாரதியெனும்
தங்கத் தமிழன் காலத்தில் - நான்
தவழாமல் போனேனே - அவன்
தமிழைக் கேளாமல் வீண்தானே..

கன்னித் தமிழென
கவி சொல்லி
காட்சிக்கு மொழியெழுதி
காலமெல்லாம் தமிழெழுதி
கண்ணே கலைமானே
கடைசியாய்ச் சொன்னாயே - அதை
காது குளிரக் கேட்பதற்கு
பிறவாமல் போனேனே..

விவேகச் சிங்கமென்றும்
வீரத் துறவியென்றும்
விண் வியக்க புகழெய்தி
விவேகானந்தராய் வீற்றிருந்த
வீர முனி உன்னிடம்
சீடனாய் இருந்திருக்க - நானும்
இயலாமல் போனேனே..

கடல் கொண்டு
கடாரம் வென்று
கலையுலக தொண்டாய்
கற்கோயில் கொண்டாய்
கடை வீரனாய்க் கூட - உன் படையில்
கடைசியில் நில்லாமல்
இராஜ இராஜ சோழனுனை
காணாமல் போனேனே..

அகிம்சா வழி பரப்பி
ஆயிரம் சுடர்கள் எழுப்பிய
மகாத்மா உனை
மறவாமல் இருப்பேனே - ஆனால்
உப்பெனும் தீயில் கூட - உமக்கு
உதவாமல் போனேனே..

ஈரடி எடுத்து வைத்து
விண் மண் அளந்த
வாமணன் போல்
ஈரடி குறள் கொடுத்து
விண் மண் விளக்கிய
வள்ளுவர் தாமுமக்கு
ஏடெடுத்துக் கொடுப்பதற்குள்
ஏமாந்து போனேனே..

மாவீரன் அலெக்சாண்டரும்
மாமேதை இராமுனுஜரும்
வெண்கலக் குரலோன் பாகதவரும்
வெண்புரவி வந்தியத்தேவனும் - என்
எண்ணம் கவர்ந்த
ஏடுகொள்ளா ஏனையரும்
எப்போது இனி வருவார்??

No comments: