Thursday, December 6, 2007

நீ வருவாய்..

பஞ்சனையில் நீயிருக்க
பால்நிலா ஒளிவீச
பாவையுன் பிள்ளைமுகம்
பரவசமாக்குதடி - உனைப்
பார்க்க நெஞ்சம் துடிக்குதடி

உருவம் சிலையாய் இருப்பவளே
உள்ளம் மலராய் மணப்பவளெ
உன் முகத்தை காண்பேனா?
உவகை நானும் கொள்வேனா?

நிதமும் உன்னைத் தேடினேன்
நிலவாய் உன்னைப் பார்க்கின்றேன்
நேரில் என்று வருவாயோ?
நேசம் தந்து காப்பாயோ?
-12.12am
14/8/2002

No comments: