தோட்டத்திலே நின்னுட்டோம்,
தொடர்ந்து நாங்க உழைச்சிட்டோம்,
வேர்வை நாங்க சிந்திட்டோம் - உரிமை
வேட்கையோட காத்திட்டோம்..
வசதியின்றி வாழ்ந்திட்டோம்,
வாழ்க்கையோடு போரிட்டோம்,
யாருமே இங்கு உதவுலே,
ஒன்னுமே இன்னும் செய்யுலே..
நாங்க இங்க பாட்டாளி - இப்ப
யாரு எங்க கூட்டாளி,
இனியும் நாங்கள் வாழ்வதா?
இல்லை மடிந்து போவதா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment