தோட்டத்திலே நின்னுட்டோம்,
தொடர்ந்து நாங்க உழைச்சிட்டோம்,
வேர்வை நாங்க சிந்திட்டோம் - உரிமை
வேட்கையோட காத்திட்டோம்..
வசதியின்றி வாழ்ந்திட்டோம்,
வாழ்க்கையோடு போரிட்டோம்,
யாருமே இங்கு உதவுலே,
ஒன்னுமே இன்னும் செய்யுலே..
நாங்க இங்க பாட்டாளி - இப்ப
யாரு எங்க கூட்டாளி,
இனியும் நாங்கள் வாழ்வதா?
இல்லை மடிந்து போவதா?
Monday, September 10, 2007
Wednesday, August 29, 2007
உன்னால்...
பார்த்தபடி நின்றிருந்தேன் - மற்றதை
பாராமல் மறந்திருந்தேன்..
பாவையுன்னைக் கண்டவுடன்
பாரினில் காணவில்லை வேறெதுவும்..
இனிதாக வரவேற்றாய் - பெண்
இலக்கணமாய் வீற்றிருந்தாய்..
மூர்ச்சையாகிப் போயிருப்பேன் - உன்
முந்தானை மோதலிலே..
சிரித்திருந்தாய்
சரிந்திருந்தேன்..
என்னுள் உன்னால் வாட்டம்,
எதனால் இந்த மாற்றம்,
எனக்கே என்னைத் தெரியவில்லை,
எனக்கு உன்னைப் புரியவில்லை...
பாராமல் மறந்திருந்தேன்..
பாவையுன்னைக் கண்டவுடன்
பாரினில் காணவில்லை வேறெதுவும்..
இனிதாக வரவேற்றாய் - பெண்
இலக்கணமாய் வீற்றிருந்தாய்..
மூர்ச்சையாகிப் போயிருப்பேன் - உன்
முந்தானை மோதலிலே..
சிரித்திருந்தாய்
சரிந்திருந்தேன்..
என்னுள் உன்னால் வாட்டம்,
எதனால் இந்த மாற்றம்,
எனக்கே என்னைத் தெரியவில்லை,
எனக்கு உன்னைப் புரியவில்லை...
சின்னக் கவிதை..
என்னை உனக்குள் தொலைத்தேன்
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..
Subscribe to:
Posts (Atom)
