பார்த்தபடி நின்றிருந்தேன் - மற்றதை
பாராமல் மறந்திருந்தேன்..
பாவையுன்னைக் கண்டவுடன்
பாரினில் காணவில்லை வேறெதுவும்..
இனிதாக வரவேற்றாய் - பெண்
இலக்கணமாய் வீற்றிருந்தாய்..
மூர்ச்சையாகிப் போயிருப்பேன் - உன்
முந்தானை மோதலிலே..
சிரித்திருந்தாய்
சரிந்திருந்தேன்..
என்னுள் உன்னால் வாட்டம்,
எதனால் இந்த மாற்றம்,
எனக்கே என்னைத் தெரியவில்லை,
எனக்கு உன்னைப் புரியவில்லை...
Wednesday, August 29, 2007
சின்னக் கவிதை..
என்னை உனக்குள் தொலைத்தேன்
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..
Subscribe to:
Posts (Atom)