Wednesday, August 29, 2007

உன்னால்...

பார்த்தபடி நின்றிருந்தேன் - மற்றதை
பாராமல் மறந்திருந்தேன்..
பாவையுன்னைக் கண்டவுடன்
பாரினில் காணவில்லை வேறெதுவும்..

இனிதாக வரவேற்றாய் - பெண்
இலக்கணமாய் வீற்றிருந்தாய்..
மூர்ச்சையாகிப் போயிருப்பேன் - உன்
முந்தானை மோதலிலே..

சிரித்திருந்தாய்
சரிந்திருந்தேன்..

என்னுள் உன்னால் வாட்டம்,
எதனால் இந்த மாற்றம்,
எனக்கே என்னைத் தெரியவில்லை,
எனக்கு உன்னைப் புரியவில்லை...

No comments: